மசோதா வருகுது! மனிதனை திருத்த!
மாசுகள் இனி மண்ணில் குறைக்க,
மனிதன் ரெயிலென புகைத்ததை நிறுத்தி,
மாசுகள் குறைத்திட மசோதா வருகுது!
பொதுஇடங்களில் புகைக்க கூடாதாம் - நற்
சிந்தனை உடையோர் சீறி எழுந்தனர்,
ஒரு பெண் என்னைத் தொட்டால் இனிமை
அவள் பெண்ணல்ல உண்மையில் புதுமை
அவள் புதுமையல்ல அவள் என் இமை
அவள் இமையல்ல அவள் என் சாதிமை
வான் மழைத்துளி எல்லாம் மண்ணுக்கே
என் உயிர்த்துளி எல்லாம் தமிழ்பெண்ணுக்கே
மண்ணின் மைந்தா புவியில் நிலைப்பாயா?
மதங்கள் இல்லாத மானுடம் செய்வாயா?
கண்ணின் உறக்கம் கழற்றி எரிவாயா?
வித விதமான வேற்றுமை கலைவாயா?
விழுப்புண் ஏந்திய வீரன் ஆவாயா?
விந்தைகள் செய்து வியக்க வைப்பாயா?
வீணர் கூடி விளக்கம் அளித்து
விதவை எனுமோர் பட்டம் புனைந்து
வண்ணப் புடவை வேண்டாம் என்று
வெள்ளைப் புடவை போதும் என்றனர்!
பாரதி கண்ட புதுமை பெண்கள்
பாரதம் முழுதும் பரவிக் கிடக்க
பாகம் பிரிக்கும் பால்நிற ஆடை
இதுவரை ஏன் கூரவில்லை? இதற்கு முன்பு இப்படி ஒன்று இருந்த தென்று என்ன சான்று? இதயச் சுவரில் எழுதிய சொல்லை இன்னும் ஏன்நீ வெளியிட வில்லை? இனிபோய் நீயும் வெளியிடு வாயெனில் இனிவரும் விளைவுகள் நேரிடும் உனக்கே இடியும் தாங்கும் இதயம் அன்று